தற்போதைய இளவட்ட ஹீரோக்களில் பலர் தங்களுக்கான ஹீரோ இமேஜை கட்டிக்காத்து வரும் வேளையில், அஜீத் மட்டும்தான் மங்காத்தாவில் தைரியமாக வில்லனாக களமிறங்கினார். அதோடு நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது, ரொம்ப போரடிக்குது என்று சொல்லியே நடித்தார்.
அதையடுத்து, தொடர்ந்து அவரை ஹீரோவாகவே பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கும் அவரது வில்லத்தமான நடிப்பு பிடித்துப்போனதால், பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். அதனால், தனது மாற்று முயற்சிக்கு பலன் கிடைக்கவே அதை தொடர்ந்து வருகிறார் அஜீத். அதோடு அந்த சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலையும் விடவில்லை.

ஆக, அஜீத்தின் நெகட்டீவ் ரோல் நடிப்புக்கு ரசிகர்கள் கொடுத்த கைதட்டலைப்பார்த்த விஜய், சூர்யா இருவருக்கும்கூட அதன்பிறகு வில்லனாக நடிக்கும் ஆசை ஏற்பட்டது. அதனால் அதற்கேற்ற கதையை தேடி வந்தவர்கள். இப்போது விஜய் கத்தியிலும், சூர்யா அஞ்சானிலும் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

ஆக, அஜீத்தின் வில்லத்தனமான நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு, விஜய், சூர்யாவுக்கு கிடைக்குமா? என்பது கத்தி, அஞ்சான் படங்கள் வெளிவரும்போதுதான் தெரியும்.
11 Jun 2014

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top